Article Top Ad
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் நாளை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் முஸ்லீம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் பிரதான எதிர்க்கட்சி சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணித்துள்ளதால் எதிரணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லீம் கட்சிகள் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்காதென அறியமுடிகிறது.
அரசுக்கு அரசாங்கத்தின் பங்காளியாகவுள்ள இதொகா, ஈ.பி.டீ.பி உட்பட ஒருசில கட்சிகளே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவுள்ளன.