மட்டக்களப்பில் 1300 பேருக்கு ஒமிக்ரோன்? ஒரு வாரத்தில் 6 பேர் உயிரிழப்பு

0
290
Article Top Ad

மட்டக்களப்பில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 வயதுடைய யுவதி ஒருவர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.