கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0
291
Article Top Ad

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 20 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 621 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,659 ஆக அதிகரித்துள்ளது.