கழிவறையில் இருந்து கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

0
306
Article Top Ad
கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதியின் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் வி.கோட்டா அடுத்த அரிமாகுல பள்ளியை சேர்ந்தவர் அனிதா (வயது 20). இவர் திருப்பதி – சந்திரகிரி இடையே தாடிதோப்பு என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து திறன் மேம்பாட்டு பயிற்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
விடுதியிலிருந்த மாணவி சனிக்கிழமை கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தார். விடுதிக்கு வந்த மாணவி திடீரென காணாமல் போயுள்ளார்.
அனிதா திடீரென காணாமல் போனதால் உடன் தங்கியிருந்த மாணவிகள் மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அனிதா கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்குள்ள குளியலறை ஒன்று வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அங்கு மாணவி பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் காயம் உள்ளது. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து எம்.ஆர்.பள்ளி பொலிசாருக்கு கல்லூரி காப்பாளர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து குளியலறையில் பிணத்தை வைத்துவிட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.