யாழ் பல்கலைக்கழக வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டம்

0
323
Article Top Ad

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலை மூடி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன. அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.