கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கைது

0
300
Article Top Ad

90 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைச் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபாவில் இருந்து துபாய் ஊடாக குறித்த பெண் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோகிராம் 532 கிராம் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இந்தியப் பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.