உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானம்?

0
422
Article Top Ad

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆலோசித்து வருகின்றது.

இது தொடர்பில் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.