காலிமுகத்திடல் போராட்ட களத்தில் தமிழில் தேசிய கீதம்

0
137
Article Top Ad

கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போராட்டக் களத்தில் நேற்று சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஐக்கியப்படும் வேளையில் பிரிவினை எதற்கு எனவும் அந்தத் தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.