குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு

0
202
Article Top Ad

கணினி அமைப்பின் பழுதடைந்த நிலை சீரமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று தமது அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தல் விடுத்திருந்தது.

கணனி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்திருந்தது.