இன்றும் நாட்டில் மின்வெட்டுக்கு அனுமதி

0
276
Article Top Ad

நாட்டில் இன்று புதன்கிழமையும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய A, B, C, D, E, F, G, H, I, J பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி 15 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல் P, Q, R, S, T, U, V, W பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியால மின்வெட்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.