சர்வதேச விமான சேவைக்கு 27 ஆம் திகதி முதல் அனுமதி

0
316
Article Top Ad

சர்வதேச விமான சேவைக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அனுமதியளிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் விமான சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் மாத்திரம் சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் வழக்கமான விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.