காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்

0
153
Article Top Ad

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடலில் 9 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி, ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில், குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் – பண்ணைப் பாலத்திற்கு அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தில், இளைஞர், யுவதிகள் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.