மின்வெட்டு நேரம் மூன்றரை மணித்தியாலங்களாகக் குறைப்பு

0
216
Article Top Ad

இலங்கையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில், இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாகக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில், இ்ந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள முன்னதாக மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.