சகுராய் விமான சேவை அதிகாரிகள் இருவர் கைது

0
311
Article Top Ad

சகுராய் விமான சேவை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைப் பொறியியலாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இலகுரக விமானம் ஒன்று திடீரென கட்டுநாயக்க கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தின்போது விமானிகள் இருவரும் வௌிநாட்டுப் பயணிகள் இருவரும் காயமடைந்திருந்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து சகுராய் விமான சேவையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.