தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 5 பேர் விடுதலை

0
328
Article Top Ad

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 05 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 05 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்கள் பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.