மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி – காலிறுதிக்கு முன்னேறியது இலங்கை

0
306
Article Top Ad

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லலா 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றது.

சதிஷ் ராஜபக்ச 76 ஓட்டங்களையும், அஞ்சல பண்டார 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி இலங்கை அணி இதுவரை கலந்து கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.