ஐதராபாத்தில் அடுத்த கட்டப் பணியை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்

0
130
Article Top Ad

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த பணிகள் தொடர்பான தகவல்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷூம், இயக்குநரும் ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாயும் கடந்த ஜனவரி 17 ஆம் திகதி தாங்கள் பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த தம்பதியருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரிவதாக தங்களின் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தனர்.

ஐதராபாத்தில் இருந்து வெளியான புகைப்படம்

இந்நிலையில் இயக்குநர் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்று தயாராகி வருவதாகவும், இதற்கான ஷூட்டிங் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகி, 27 ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக படக்குழுவினருடன் ஐதராபாத்தில் ஐஸ்வர்யா உரையாடலில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

பரபரப்பான பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

முன்னதாக ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 திரைப்படமும் சரி, அனிருத் இசையில் அமைந்த வை திஸ் கொலவெறி பாடலும் சரி கவனிக்கப்பட்டன. குறிப்பாக  தனுஷ் குரலில் வெளியான வை திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்து யூரியூப்பில் மிகப் பெரிய சாதனையையும் படைத்தது.

இயக்குநர் ஐஸ்வர்யா

இயக்குநர் ஐஸ்வர்யா, கடந்த 2012 ஆம் ஆண்டு 3 திரைப்படத்தை இயக்கியிருந்ததைத் தொடர்ந்து, கடந்த 2015 ஆம் ஆண்டு வை ராஜா வை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். கெளதம் கார்த்திக் பிரியா ஆனந்த் விவேக் மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் வாழ்த்து

இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கும் இந்த ஆல்பம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகக் கூடிய அறிவிப்புக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா, இவ்வாறு தன் அடுத்த கட்ட பரபரப்பான பணிகளில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை பாசிடிவாக தெரிவித்து வருகின்றனர்.