இலங்கையில் முழுமையாக தடுப்பூசி பெறாதோர் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது

0
284
Article Top Ad

இலங்கையில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி பெறாதோர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் கருத்துப்படி, மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என அடையாளப்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.