சட்டத்தரணிகள் குழு மீது தாக்குதல் – இணுவில் பகுதியில் சம்பவம்

0
152
Article Top Ad

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் சுகாதார பரிசோதகர், சட்டத்தரணிகள், காவலாளி ஆகியோர் மீது ஐவர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகப் பொலிஸாருக்கு தகவல்அளித்தபோதும் நேற்றுக் காலை வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை என்று கூறப்பட்டது.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் சட்டத்தரணிகள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.