நிலஅளவைக்கு எதிர்ப்பு – சிவாஜி, ரவிகரன் மீதான வழக்கு திகதியிடப்பட்டது

0
130
Article Top Ad

முல்லைத்தீவில் கடற்படைக்கு காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியைக் கடற்படைக்கென சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்குச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்களை கடமையை செய்யவிடாமல் தடுத்தனர், வாகனத்துக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டுக்களில் எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் ஆகியோர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கே எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.