48 மணித்தியாலயத்துக்குள் ரஷ்யாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் உக்ரைன்

0
285
Article Top Ad

தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை நடத்த நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளை உக்ரைன் அழைத்துள்ளது.

எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் உத்தியோகபூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்து விட்டதாக, உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் திட்டத்தில் ‘வெளிப்படைத்தன்மைக்காக’ அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே “அடுத்த நடவடிக்கை” என அவர் தெரிவித்தார்.