குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியது மத்திய அரசு

0
285
Article Top Ad

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் நான்கு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு – தலைக்கவசம் அணிவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,  ”4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது.

இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி  முதல் அமுலுக்கு வந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.