அமைதி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார் உக்ரைன் ஜனாதிபதி

0
224
Article Top Ad
உக்ரைன் மீது ரஷ்யா 31 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 26, 08.20 AM 
 
உக்ரைனுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை இங்கிலாந்து வழங்க உள்ளது.
 
இதன்படி உக்ரைனுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, உக்ரைன் முழுவதும் தற்போது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
மார்ச் 26, 07.30 a.m 
 
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  மீண்டும் ரஷியாவிடம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அமைதி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
மார்ச் 26, 07.10 a.m 
உக்ரைனுக்கு எதிரான ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் போர், “ஆத்திரமூட்டப்படுவதுடன், நியாயமற்றது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது” என்று ஒரு நேட்டோ அதிகாரி கூறியதுடன், உக்ரைனில் இரத்தக்களரியின் தீவிர நோக்கம், வேண்டுமென்றே அல்லது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மூலம் பொதுமக்களைக் கொன்று மாஸ்கோ போர்க் குற்றங்களைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
மார்ச் 26, 06.22 a.m 
வடக்கு நகரமான செர்னிஹிவில் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரஷிய ராணுவம் வேண்டுமென்றே உணவு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. போருக்கு முந்தைய 2,85,000 மக்கள்தொகையைக் கொண்டிருந்த நகரத்தில் தற்பொது 1,30,000 க்கும் குறைவான மக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 26, 4.19 AM

‘உயிரோடு உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள்’ – ரஷிய துருப்புகளுக்கு உக்ரைன் வீரர்கள் எச்சரிக்கை

மார்ச் 26, 1.52 AM
 
ரஷியா கைப்பற்றிய ஹர்சன் நகரை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவர உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
வெளிநாட்டில் ரஷியா நடத்திவரும் நடவடிக்கைகள் (உக்ரைன் மீதான போர்) குறித்து போலியான தகவல்களை பரப்புவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்திற்கு அதிபர் புதின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மார்ச் 26, 1.23 AM

உக்ரைன் இராணுவ கட்டளை மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

மார்ச் 26, 1.18 AM
பெலாரஸ் அதிபர், குடும்பத்தினர் மீது பொருளாதார தடை – ஆஸ்திரேலியா நடவடிக்கை
மார்ச் 26, 00.49 AM

உக்ரைனுக்கு ஆயுதம் தர முடியாது – ஹங்கேரி பிரதமர் திட்டவட்டம்