ஒருவாரத்துக்கு தேவையான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும்?

0
126
Article Top Ad

வறட்சியான காலநிலை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.

இலங்கை மின்சார சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

இதனால், இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையால், மின் உற்பத்திக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.