அமைச்சர் நாமலின் குடும்ப உறுப்பினர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம் ?

0
155
Article Top Ad

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லிமினி ராஜபக்சவும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஏனைய இரண்டு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பது தெரியவில்லை எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.