நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபையிலிருந்து வெளியேற்றம்

0
115
Article Top Ad

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.

குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபையிலிருந்து வெளியேற்றுவதற்கென நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு இடைநிறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.