எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் – தங்காலை மற்றும் கண்டியில் பேரணி

0
116
Article Top Ad

எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து போராடி வருகின்றனர்.

இதேவேளை கொட்டும் மழையிலும் நேற்று இரண்டாவது நாளாக காலி முகத்திடலில் இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவுகள் மற்றும் குடிநீர், மற்றும் மழைக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.