இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மின்துண்டிப்பு அமுலாகாது

0
135
Article Top Ad

இன்றைய தினமும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாமென இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளையதினம் 02 மணிநேரம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.