40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்!

0
141
Article Top Ad

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மேலும் ஒரு கப்பல் நேற்று இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் ஓரளவு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யமுடியும் எனவும் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், டீசல் மற்றும் சுப்பர் டீசல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் எனவும் அமைச்சர் கூறியிள்ளார்.

இதேவேளை, எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.