ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை!

0
123
Article Top Ad

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.