கல்வி அமைச்சுக்குமுன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகையடிப்பு!

0
141
Article Top Ad

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் கல்வி அமைச்சுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் கல்வி அமைச்சுக்கு முன்னால் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியதுடன், உள்ளே சென்று அதிகாரிகளை சந்திக்கவும் முயற்சித்தனர்.

இவ்வேளையில் அவர்களை பிரதான நுழைவாயிலில் மறைத்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர்.