ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஹிருணிகா போராட்டம்!

0
123
Article Top Ad

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஹிருணிகா, சில பெண்கள் மற்றும் ஆண்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் வேடிக்கையாகப் பேசுவதை விடுத்து வெளியில் வந்து தம்மைச் சந்திக்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.