தொடரும் துப்பாக்கிச் சூடுகள்: கம்பஹாவில் ஒருவர் பலி!

0
111
Article Top Ad

கம்பஹா இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சலூன் ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கிதாரி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவ​ரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக டுப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.