மதிய உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்பு

0
109
Article Top Ad

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஆகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், அதனை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 7,920 பாடசாலைகளில் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்