ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

0
96
Article Top Ad

இதுவரை தடை செய்யப்பட்ட ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளின் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடன்படிக்கையின் கீழ் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்புகளின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தடை நீக்கப்பட்ட அமைப்புகள் பின்வருமாறு.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
குளோபல் தமிழ் மன்றம்
உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு
திராவிட ஈழ மக்கள் காங்கிரஸ்
கனடிய தமிழ் காங்கிரஸ்
பிரிட்டிஷ் தமிழ் மன்றம்