கோட்டாவின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவுகள் குறித்து பந்துல விளக்கம்!

0
90
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போதைய வெளிநாட்டுப் பயணங்களுக்கு தனது தனிப்பட்ட நிதியின் ஊடாகவே செலவுகளை செய்துவருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கப் பணத்தைச் செலவிடுவதில்லை எனவும், அந்தச் செலவுகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட நிதியினால் மேற்கொள்ளப்படுபவை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று(16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், மாலைதீவு மற்றும் சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருந்து தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை எனவும் அவர் கூறியுள்ளார்.