இலங்கையில் புதிய முயற்சி ; பஸ்களில் இலத்திரனியல் அட்டை!

0
93
Article Top Ad

பஸ்களில் பயணிக்கும் போது இலத்திரனியல் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை தொடர்பான முன்னோடி பரீட்சார்த்த திட்டம் இன்று (19) முதல் அமுல்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த முன்னோடித் திட்டம் மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர், நிலான் மிரண்டா குறிப்பிட்டார்.

இந்த முன்னோடித் திட்டம் மாத்தறை – கொழும்பு வழித்தடத்திற்கு அமுல்படுத்தப்பட்டு அதன் பின்னர் அதன் வெற்றியளிப்பு மற்றும் குறைபாடுகள் சீர் செய்யப்பட்ட பின்னர் ஏனைய வழித்தடங்களுக்கும் பின்னர் நாடளாவிய ரீதியிலும் அமுல்பபடுத்தப்படவுள்ளது.

இதற்காக மத்திய வங்கியின் மேற்பார்வையில் மக்கள் வங்கி அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் ஏனைய வங்கிகளுக்கும் இது அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.