கோத்தபய ராஜபக்சவை நாட்டுக்கு அழைத்துவர பசில் முயற்சி!

0
122
Article Top Ad

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினர்தான் காரணம் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் அமெரிக்காவில் குடியேற கோத்தபய விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கோத்தபய ராஜபக்ச, விரைவில் இலங்கை திரும்புவார் என்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நாடு திரும்பினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கோத்தபய ராஜபக்ச நாடு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கோத்தபய ராஜபக்ச நாடு திரும்புவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பசில் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுக்குறித்து பொதுஜன பெரமுன கட்சி வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து தருமாறு பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோத்தபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்ச, ஹோட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.