யாழ்ப்பாணம்-கொழும்பு ரயில் பயணத்தை ஒரு மணிநேரம் குறைக்கும் முயற்சி

0
145
Article Top Ad

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான புகையிரத போக்குவரத்தை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், வடமாகாண போக்குவரத்து சேவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சரக்கு போக்குவரத்து ரயிலை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு டொலர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், பயணிகளுக்கு சில விசேட நிவாரணங்கள் வழங்கப்படும்.

புதிய அரசாங்கத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், யாழ் இரவு விரைவு சேவை, யாழ்ப்பாண இரவு தபால் புகையிரதம் மற்றும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரை பயணிக்கும் கிளி தேவி ஆகிய மூன்று புகையிரத சேவைகளை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.