ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் : விரிவான விசாணைகளுக்கான புதிய குழு ஜனாதிபதியால் நியமனம்

0
28
Article Top Ad

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகைளை முன்னெடுப்பதற்கான விசேட குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வவுணத்தீவு கொலை விவகாரத்துடன் எல்.டீ.டீ.ஈ அமைப்பினர் தொடர்பு பட்டிருந்தாக இராணுவ புலனாய்வுச் சபையினால் (DMI)அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளது.

இக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.