யாழ். எடுத்துச்செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல் – தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைப்பு

0
31
Article Top Ad

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல், யாழ்ப்பாணத்தலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்னாரின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட இரா.சம்பந்தனின் பூதவூடல், கார் மூலம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது, அன்னாரின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கிற்கிற்கு கொண்டுச் செல்லப்பட்ட இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று (04) மாலை 4 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலஞ்சென்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.