“கடவுளே காப்பாற்றினார்“

0
29
Article Top Ad

படுகொலை முயற்சியிலிருந்து தப்பிப்பதற்கு தெய்வீக தலையீடே உதவியதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரச்சார கூட்டத்தில் ஈடுபட்டிருந்த போது டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சைகளின் பின்னர் நலமுடன் வீடு திரும்பியதன் பின்னர் துப்பாக்கி பிரயோகம் குறித்து கருத்து வெளியிட்டார்.

இந்த கொலை முயற்சியை தடுத்தது கடவுள் என தெரிவித்த அவர் தீமை வெல்லவதற்கு அனுமதிக்காமல் அமெரிக்கர்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அமெரிக்காவின் உளவு அமைப்பு மற்றும் பொலிஸாருக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பேரணியில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.