பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்க தீர்மானம்

0
17
Article Top Ad

பெருந்தொட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 1700 ரூபாவான வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்த நிலையில், சம்பள நிர்ணய சபையில் அது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சம்பள நிர்ணய சபையில் இது தொடர்பான இறுதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக சம்பள நிர்ணய சபையில் வாக்கெடுப்பொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.