சம்பிக்கவின் ஆதரவும் சஜித்துக்கு: உடன்படிக்கையும் கைச்சாத்து

0
13
Article Top Ad

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க உள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொண்டமைக்கான உடன்படிக்கையும் இன்று புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவை சம்பிக்க ரணவக்க ஆதரிப்பார் என பல்வேறு கருத்துகள் கடந்த காலத்தில் வெளியாகியிருந்தன. என்றாலும், இன்றைய தினம் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என சம்பிக்க ரணவக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது ஆதரவு நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்த உள்ளது. ரிசாத் பதியூதினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தொடர்ந்து பேச்சுகளை நடத்தி வருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

என்றாலும், கட்சியின் தலைவர் ரிசாத் பதியூதின் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. இன்று அவர் தமது நிலைப்பாட்டை அறிக்க உள்ளதாக தெரியவருகிறது.