பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கி: உறுப்புரிமையை நாடும் இலங்கை!

0
18
Article Top Ad

பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த பாடுபடும் வளர்ந்து வரும் சந்தைகளின் குழுவான பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உறுப்புரிமையை இலங்கை நாடுகிறது.

பிரிக்ஸ் ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் அண்மையில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பிரிக்ஸ் அமைப்பினை அணுகுவதற்கு இலங்கைக்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்தன குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பின் கீழ் நிறுவப்பட்ட புதிய மேம்பாட்டு வங்கியை அணுகுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து கமிட்டி அறிக்கை விவரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதேவ‍ேளை, இங்கை பிரிக்ஸ் அமைப்புக்கு அணுவதற்கு ஏற்புடைய விடயங்களை ஆராய்ந்து பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.01.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவானது இலங்கை பிரிக்ஸ் அமைப்புக்கும், அதன் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி வங்கிக்கும் அணுவதிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் பங்கெடுத்த அனைத்து தரப்பினர்களும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வது பற்றிய நேர்மயமான பதிலளிப்புக்களை வழங்கியுள்ளனர்.

அதற்கிணங்க குறித்த இராஜதந்திர நடமுறைகளைக் கண்டுபிடித்து, இலங்கை பிரிக்ஸ் அமைப்பு மற்றும் அதன் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பான்மைக்கு விண்ணப்பிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here