தமிழ்ப் பொது வேட்பாளர் அரியம் முன்னிலையில் மாவை பிரசன்னம்

0
4
Article Top Ad

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here