லெபனானில் போர் பதற்றம்: புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான விசேட அறிவிப்பு

0
12
Article Top Ad

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லெபனானின் தற்போதைய இராணுவ நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை ஒக்டோபர் எட்டாம் திகதி முதல் 2025 ஜனவரி எட்டாம் திகதி வரையான மூன்று மாத காலத்திற்கு தடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் தூதரகத்திற்கு வருவதன் மூலம் பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வரும் போது பின்வரும் ஆவணங்களை தூதரக அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

01) செல்லுபடியாகும் விசா மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (இந்த ஆவணங்கள் கட்டாயம்.)

02) தற்போதைய வேலை ஒப்பந்தம் அல்லது தற்போதைய பணியிடத்துடன் தொடர்புடைய வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம்

03) தற்போதைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அல்லது வேலை வாய்ப்பு கடிதம் இல்லாதவர்கள் தூதரகத்தால் வழங்கப்பட்ட சுய-அறிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும்.

இந்தப் பதிவுக்கு அரசாங்கக் கட்டணமாக 62 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.

இந்தப் போர்ச் சூழ்நிலையில் வழங்கப்பட்ட விசேட நிவாரணக் காலம், பணியகத்தின் பதிவைப் பெற்று, பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் நலன்புரி மற்றும் காப்புறுதிப் பலன்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேலை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தூதரகம் இதற்காக விசேடமாக 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும்.

அன்று முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை இந்த சேவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here