
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புகலிடம் கோருவோருக்கு தடை விதித்திருப்பதால், கனடா அதிகமானவர்களை ஏற்கும் அளவுக்கு ஒரு வரையறை உள்ளது (Limited Capacity )என என்று கனடாவின் குடியேற்ற அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்த வாரம் வெளியிட்ட முக்கிய உத்தரவுகளில் ஒன்றாக, அமெரிக்காவின் புகலிடம் வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதனால், போரால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு வர அனுமதி பெற்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.
மில்லர் கூறுகையில், அமெரிக்காவின் முடிவு துரதிருஷ்டவசமானது, ஆனால் கனடா போரிலிருந்து தப்பி வருவோருக்கு உதவிக்கரம் வழங்கும் நடவடிக்கையைத் தொடரும். இருப்பினும், எவ்வளவு பேர் வர முடியும் என்பதற்கே ஒரு வரம்பு இருக்கிறது என்று அவர் விளக்கினார்.
கனடாவின் புகலிடம் வழங்கும் நிலை
- 2021 ஆம் ஆண்டு தாலிபான் ஆட்சி பிடித்தபோது, 50,000க்கும் மேற்பட்ட ஆப்கானிகளை ஏற்கிறது.
- ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், 3,00,000 உக்ரைனியர்களுக்கு வசதியளித்துள்ளது.
- மேலும், பல ஆண்டுகளாக தசதச கணக்கான சிரியர்களையும் கனடா வரவேற்றுள்ளது.
“எங்களுக்கு ஒரு வரம்பு உள்ளது. இருப்பினும், சில வாய்ப்புகள் கிடைத்தால், நாங்கள் அதை பரிசீலிக்க தயார்,” என்று மில்லர் கூறினார்.
“போரில் இருந்து தப்பி வரும் மக்களுக்கு உதவுவது கனடாவின் பணி. நாம் இதை மனதார செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டிரம்பின் புதிய உத்தரவு
டிரம்ப் திங்கட்கிழமை கையெழுத்திட்ட உத்தரவின் கீழ், ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்பு விமானங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டவர்கள் பயணிக்கலாம். இருப்பினும், புதன்கிழமை வெளியான தகவலின்படி, அமெரிக்காவில் புகலிடம் கோருதல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆப்கான்கள் அமெரிக்கா செல்ல காத்திருக்கின்றனர்
தலிபானின் ஆட்சிக்கு பிறகு, அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்கள், மனித உரிமை குழுக்கள், மற்றும் உதவி நிறுவனங்களுடன் பணியாற்றிய 15,000 ஆப்கான்கள் பாக்கிஸ்தானில் அமெரிக்கா செல்ல காத்திருக்கின்றனர்.
கனடா தனது வரம்புக்குள் இருந்து மக்களுக்கு உதவ மேற்கொள்ளும் முயற்சிகளை தொடரும் என மில்லர் உறுதியளித்துள்ளார்.