டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் திமுத் கருணாரத்ன

0
4
Article Top Ad

இலங்கையின் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், முன்னாள் தலைவருமான திமுத் கருணாரத்ன, தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமையும் என அவர் ஸ்ரீலங்கா கிரக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையின் டெஸ்ட் துடுப்பாட்டத்தின் தூணாக இருந்த கருணாரத்னே, அண்மைய காலமாக ஓட்டங்களை குவிப்பதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.

இது டெஸ்ட் விளையாட்டிலிருந்து விலகுவதற்கான அவரை முடிவினை தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது வடிவத்தில் சரிவு இருந்தபோதிலும், அவர் இலங்கையின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் தொடக்க வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.பல மறக்கமுடியாத வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.

100 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின்னர் விடைபெறும் அவரது முடிவு இலங்கை கிரிக்கெட்டின் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும்.

2012 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கருணாரத்ன அவரது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கையில், 15 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here