யாழ்ப்பாணம் செம்மனியில் மனித புதைகுழியா? மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்

0
13
Article Top Ad

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையொட்டி, நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.

இதனை அடுத்து , கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் ஆகும்.

இதேவேளை அப்பகுதியில் மூன்று குழிகள் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு குழிகளில் எலும்புக் கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தினாலேயே ஒப்பந்தகார் இந்தப் பணிகளை நிறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் செம்மனிப் படுகொலையில் கொல்லப்பட்டவர்ளுடைய அல்லது புதைக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடையதா இருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளிப்படுத்தபடுகின்றன.

இதனாலேயே பலரின் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த எலும்பு கூடுகள் எப்படி எங்கிருத்து வந்த்து என்பது தொடர்பில் அச்சத்தில் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here